ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 20 பேர் கைது: ரூ.11,300 பறிமுதல்..!

சென்னை: சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட்போட்டியின் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23.05.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

அதன்பேரில், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 22.05.2023 அன்று 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 டிக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.5,300/- பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (23.05.2023) தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக, 9 வழக்குகள் பதிவு செய்து 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, 22 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.6,000/- பறிமுதல் செய்தனர். 22.05.2023 மற்றும் 23.05.2023 ஆகிய 2 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்து, 20 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 54 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.11,300/- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட மொத்தம் 20 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏசி வெடித்து தீ விபத்து..!!

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை..!!