இந்த வழக்கில் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், வங்கியில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள எவ்வித அடையாள அட்டைகளும் கொடுக்க தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு, ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் இதை தடுக்க அடையாள ஆவணங்களை தருவதை கட்டாயம் ஆக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது. எனினும் தற்போது நடைபெறுவது கோடைகால சிறப்பு நீதிமன்றம் என்றும் இதனை தங்களால் அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். கோடை விடுமுறை முடிந்து வழக்கமான பணிகள் தொடங்கும் போது முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.