இந்நிலையில் தந்தையை பார்ப்பதற்காக தான் மகன் சென்றிருக்கிறான் என்று தாய் நினைத்துக் கொண்டிருந்தார். இதனிடையே நேற்று திடீரென தந்தை பரசுராமன் வீட்டிற்கு வந்தபோது மகன் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூலி வேலைக்காக சென்னைக்கு சென்றிருந்த நேரத்தில் தந்தையை பார்ப்பதற்காக செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்றதால் தேடாமல் இருந்ததாகவும் மகன் வீட்டில் இல்லாததாலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் என நினைத்து மகன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பரசுராமன் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.