சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களே உங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ள வேண்டும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.