வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது

 

காங்கயம், ஏப். 29: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை கிராமம் நொச்சிக்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (55). இவர், தனது கால்நடைகளுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வைக்கோல் புல் கட்டு வாங்கி கொண்டு ஈச்சர் வேனில் ஏற்றி வந்துள்ளார். வேனை கடலூர், அன்புகுமார் (38), ஓட்டி வந்துள்ளார்.

வைக்கோல் வேன் தங்கமுத்து தோட்டம் அருகில் சென்றபோது அருகில் உள்ள மின்சார ஒயர் உரசியதால் வைகோலில் தீப் பற்றி எரிந்தது. உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகின. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு