வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

 

பொன்னமராவதி, மார்ச் 29: கடும் வெயிலினால் பொன்னமராவதியில் மதிய வேளைகளில் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வருகின்றது. பொன்னமராவதி நகர் எப்போது கூட்டமாகவே காணப்படும். அதிலும் அண்ணாசாலை எந்த நேரமும் அதிக கூட்டமும் வாகனங்களும் சென்ற வண்ணம் இருக்கும். ஆனால் தற்போது கடுமையான வெயில் வாட்டி வரும் வேளையில் 12மணிக்கு மேல் மிக குறைவான அளவிலேயே வாகனங்களும் மக்கள் கூட்டமும் காணப்படுகின்றது.

வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எப்போது புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் அதிகம் வந்து செல்லும் பொன்னமராவதி நகரில் இப்போது வெயிலின் தாக்கத்தால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது இதனால் மதியம் 12மணி முதல் மாலை 5மணி வரை கடும் வெப்பம் வாட்டி வருவதால் மக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது.

Related posts

தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்

கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை மாத்திரை பறித்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை

திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்