மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

கரூர், மே 5: மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், வேடசந்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோடங்கிப்பட்டி அடுத்துள்ள பத்தாம்பட்டி பிரிவு வழியாக செல்கிறது.

இதே போல், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கருர் போன்ற அனைத்து பகுதிகளுககு வரும் வாகனங்கள் அனைத்தும் பத்தாம்பட்டி வழியாக வந்து செல்கிறது. பத்தாம்பட்டி பகுதியில் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில, பத்தாம்பட்டி பிரிவு அருகே பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

இவை கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடநதுள்ளதால் தற்போது அவற்றின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எநத நேரமும் விழும் நிலையில் உள்ள இதனை யாரும் தற்போது பயன்படுத்தாமல் இருந்தாலும், குடிமகன்களுக்கு தஞ்சம் அளிககும் வகையில் இவை உள்ளன.

எனவே, இந்த பகுதியின் வழியாக செல்லும் வாகனங்களில் ஏறிச் செல்லும் பத்தாம்பட்டி பகுதியினர் நலன் கருதி இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதனை விரைந்து சீரமைத்து எளிதாக பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை