மாறி மாறி செருப்பால் அடித்து கொண்ட பெண்கள் ஒடுகத்தூரில் பரபரப்பு பஸ்சில் சீட்டு பிடிக்கும் தகராறு

ஒடுகத்தூர், மார்ச் 28: ஒடுகத்தூர் அருகே பஸ்சில் சீட்டு பிடிக்கும் தகராறில் இரு பெண்கள் மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலிருந்து நேற்று மாலை மாதனூர் வழியாக ஒடுகத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அப்போது பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை முடியும் நேரம் என்பதால் மாதனூரில் அதிகளவில் கூட்டம் ஏறியது. மாதனூரில் ஏறிய 2 பெண்கள் பஸ்சில் சீட்டு பிடிக்க முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பஸ் என்று கூட பாராமல் ஆபாசமாக பேசியபடி பயணம் செய்தனர். இதையடுத்து மாலை 5.30 மணியளவில் ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் பஸ் வந்தது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் செருப்பால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில், ஒருவர் மற்றொரு பெண்ணின் கட்டை விரலை கடித்து விட்டார். இதனால், காயமடைந்த பெண் கத்தி கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினார். அப்போதும், அடங்காத அவர்கள் மாறி மாறி தலைமுடியை பிடித்துக் கொண்டு சண்டையிட்டனர். இதனால், பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்வதறியாமல் விழி பிதுங்கி நின்றனர். இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதையடுத்து, பஸ் நடத்துனர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றனர். பின்னர், போலீசார் அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பஸ்சில் சீட்டு பிடிக்கும் தகராறில் இரு பெண்களும் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி போஸ்ட்மேன் பலி வேலைக்கு சென்றபோது பரிதாபம் பேரணாம்பட்டு அருகே

கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது பேரணாம்பட்டு அருகே பரபரப்பு டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு

சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர் போக்சோவில் கைது குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய