சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர் போக்சோவில் கைது குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய

குடியாத்தம், மே 14: குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த மாதம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வசிக்கும் டெய்லர் வேலை செய்யும் ஜெயக்குமார்(48) என்பவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு பதறிப்போன பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை நடத்தினார். மேலும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டெய்லர் ஜெயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது