மணமேல்குடி அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு

 

புதுக்கோட்டை,ஏப்.22: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள, இடையாத்திமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் நேற்று மாலை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, வயலில் ஏற்கெனவே பழுதடைந்திருந்த மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. மின்கம்பிகள் வயலில் விழுந்ததால், வயலில் மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தன.

இதில் இடையாத்திமங்கலத்தைச் சேர்ந்த முருகையன் ஒரு காளை மாடு, சிதம்பரம் ஒரு பசு மாடு, ராமு என்பவரின் இரு பசு மாடுகளும் உயிரிழந்தன. இதனால் அதிர்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள் பெருத்த சோகத்தில் ஆழ்ந்தனர். தகவலறிந்து சென்ற வருவாய்த்துறை அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர்கள் அந்த இடத்திலேயே மாடுகளின் சடலங்களை உடற்கூராய்வு செய்தனர். மணமேல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி