புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

அவிநாசி, மார்ச்.7: அவிநாசி அருகே குன்னத்தூரில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர். குன்னத்தூர் ஊத்துக்குளி சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவர் குன்னத்தூர் தொரவலூர் சாலையில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர், பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் உள்ளிருந்த 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது