பழநி, ஜூன் 9: பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். முகாமில் 1 முதல் 15 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்குதல், மக்கும் குப்பைகளைக் கொண்டு வளம் மீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், நோய்கள் மற்றும் விவசாய மண்வளம், அடிகுழாய்கள், நீர்நிலைகள் பாதித்தல், விலங்குகள் பாதித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.