பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பிரஜ்வல் மீது வழக்கு பதியும் சில மணி நேரத்துக்கு முன்பு அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றது மிகவும் வெட்கக்கேடானது. பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்து இந்தியா அழைத்து வர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.