நாளை மின் நிறுத்தம்

 

கும்பகோணம், ஜூன் 7:கும்பகோணத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. கும்பகோணம் ராஜன் தோட்டம் துணை மின் நிலையம் காந்தி நகர் மின் பாதை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய மின்னூட்டி பொருத்தும் பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் மாநகர் ஸ்ரீநகர் காலனி, காந்தி நகர், மோதிலால் தெரு, திருநாராயணபுரம் கிழக்கு மற்றும் வடக்கு, செக்காங்கண்ணி புறவழிசாசாலை, சத்திரம் கருப்பூர், யோகம் நகர், அஞ்சுகம் நகர், மூப்பனார் நகர், மயிலாடுதுறை ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இந்த தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்: சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு

ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: 2 நாள் போக்குவரத்து தடை