தேவதானப்பட்டி அருகே தனியார் கம்பெனியில் திருடிய 3 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, ஜூன் 6: தேவதானப்பட்டி காட்ரோடு அருகே கோட்டார்பட்டியில் தனியாருக்கு சொந்தமான சோலார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(58) என்பவர் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28தேதி சோலார் கம்பெனியில் சோலார் பேனலில் இடிதாங்கிக்கு வைக்கப்பட்டுள்ள போஸ்ட்டில் இருந்த வயரை பழையவத்தலக்குண்டு இந்திராகாலனியைச் சேர்ந்த பொன்னையா மகன் உதயசங்கர்(22) என்பவர் மற்றும் 3 பேர் சேர்ந்து வெட்டி எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சத்தம்போடவும் வெட்டிய வயருடன் தப்பிச்சென்றனர். இந்த வயர் மற்றும் பாக்ஸ் மதிப்பு ரூ.1.5லட்சம் ஆகும். இது குறித்து கம்பெனியின் பாதுகாப்பு அதிகாரி லட்சுமணன் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் உதயசங்கர் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு