திருமயத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

 

திருமயம். மார்ச் 27: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் உள்ள திருச்சி, ராமேஸ்வரம், சிவகங்கை, காரைக்குடி, மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளாக விபத்து அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது விபத்தில் சிக்குபவர்களை அரசு மற்றும் ஒரு சில தனியார் ஆம்புலன்ஸ் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். இதனிடையே திருமயம் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஆர்எஸ்பி தனியார் மருத்துவமனை விபத்தில் சிக்குபவர்கள் உயிரை காப்பாற்றும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் திருமயம் பகுதியில் விபத்தில் சிக்குவோர்களை மீட்டு ஆர்எஸ்பி மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை நேற்று மூத்த மருத்துவர் ராமன், மருத்துவர்கள் ராஜசேகர பாண்டியன், சுஜிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் திருமயம் பகுதியில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் 9363939797, 7871441414 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி