திருப்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்

திருப்பூர், மார்ச் 27: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, அதில் கோகுல்ராஜ் என்பவர் இருந்தார். அவரிடம் ரூ.81 ஆயிரத்து 500 இருந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை