திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

நெல்லை, ஏப்.18: திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள மன்னர்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் நெல்சன் ராஜ்குமார்(54). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி அப்பகுதியில் சில தெருக்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் நெல்சன் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மரில் இருந்த வயரை ெதாட்டுவிட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்