சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, ஏப்.18: சேரன்மகாதேவியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மூலக்கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் செல்வகுமார் (23). இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது வலியுறுத்தலின்படி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி போலீசார் குண்டர் சட்டத்தில் செல்வகுமாரை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்