டூவீலர் மீது ஜீப் மோதியதில் தொழிலாளி பலி

 

போடி, ஜூன் 6: கேரளா மாநிலம் உடுப்பஞ்சோலை தாலுக்காவிலு ள்ள பொத்தகள்ளி எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வருபவர் பாலன் (48). இவர் நேற்று மாலை 5.30 மணி அளவில் போடியில் இருந்து தனது டூவீலரில்போடி மெட்டு வழியாக பொத்தகள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முந்தல் கடந்து போடி மெட்டு மலைச்சாலையில் சென்ற போது முதல் கொண்டை ஊசிவளைவில் திரும்பும் போது எதிரே வேக மாக தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய ஜீப் டிரைவர் போடி சங்கராபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு