சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்

 

சூலூர், ஜூன் 9: கோவை மாவட்டம் சூலூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் கடந்த 6ம் தேதி புதிதாக துவங்கப்பட்டது. கருமத்தம்பட்டி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலையங்களுக்கான அனைத்து மகளிர் காவல் நிலையம் சூலூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் துவங்கப்பட்டது.

சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், சுல்தான்பேட்டை மற்றும் செட்டிபாளையம் என 5 காவல் நிலையங்களுக்குட்பட்ட மகளிர் தொடர்பான புகார்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காவல் நிலையம் புதிதாக துவங்கப்பட்ட நிலையில கடந்த 2 நாட்களாக புகார் மனுக்களும் புகார்தாரர்களும் அதிக அளவில் குவிந்து புகார் அளித்தும் தங்களது குறைகளை மனுவாக கூறியும் நிவாரணம் தேடி வருகின்றனர். இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்பகாவே காணப்படுகிறது.

Related posts

மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்

மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு