சாலையோர மின்கம்பங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்

 

பரமக்குடி, ஏப்.29: பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தில் 500 குடியிருப்புகள் உள்ளன. மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டும். ஊருக்கும் செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களை அடிக்கடி மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் ஐந்து மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.எனவே கீழப்பெருங்கரை கிராமத்தில் மின்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்