குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் அளிக்கலாம்

நாமக்கல், ஏப்.4: நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பை சிறப்பாக நடைமுறைபடுத்தும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, புகார்களை பதிவு செய்யலாம். தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை 155214 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு