குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தஞ்சாவூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், மார்ச்13:குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தஞ்சாவூரில் மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி முன்பு நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

 

Related posts

கார் மோதி 3 பேர் காயம்

ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை

அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு