ஒட்டன்சத்திரம், மே 31: ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் நேற்று சிறப்பு ஒதுக்கீடு- மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நாளை ஜூன் 1ம் தேதி முதல் பிகாம், பிபிஏ, பிஎஸ்சி கணிதம், பிஏ ஆங்கிலம், பிஏ தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரியின் முதல்வர் விஜயரணி தெரிவித்துள்ளார்.