முசிறி, ஜூன் 7: திருச்சி மாவட்டம் முசிறி சார்பு நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முசிறி வட்ட சட்ட பணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சார்பு நீதிபதி ஜெய்குமார் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் முசிறி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்யராஜ், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நிஷாந்தினி, குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயசந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், அரசு வழக்கறிஞர் சப்தரிசி மற்றும் வழக்கறிஞர்கள் பொன்குமார், பிரபாகரன், , ராஜசேகர் மருதுபாண்டி, அருணாச்சலம், துர்காதேவி, உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.