அடுத்த மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட நெதர்லாந்து அணி அறிவிப்பு

ஆம்ஸ்டர்டாம்: நடப்பாண்டில் அக்டோபர் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபவமிக்க வீரர்களான ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் கொலின் அக்கர்மன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நெதர்லாந்து இந்த ஆண்டு உலகக் கோப்பையில் தங்கள் இடத்தைப் பதிவு செய்த அணியில் ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் கொலின் அக்கர்மன் ஜோடி இடம்பெறவில்லை, ஆனால் 15 வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஜோடி அயர்லாந்து அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் அக்கர்மேன் இரண்டாவது இடத்தில் இருந்தார், அதே நேரத்தில் வான் டெர் மெர்வே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். உலகெங்கிலும் உள்ள உள்நாட்டுப் போட்டிகளில் இரு வீரர்களுக்கும் ஏராளமான அனுபவம் உள்ளது. மேலும் நட்சத்திர
ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடே பேட் மற்றும் பந்து இரண்டிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், அக்டோபர் 3ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராகவும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. உலகக்கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து அணி விளையாட உள்ளது.

15 பேர் கொண்ட நெதர்லாந்து அணி வீரர்கள்: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ’டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் பாரேசி சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்