இந்த சமயத்தில் அந்த வழியாக வனத்துறையினரின் 3 சபாரி வேன் வந்தது. யானை வருவதைப் பார்த்ததும் வனத்துறையினர் உடனடியாக சத்தம் எழுப்பி அதை விரட்டினர். தொடர்ந்து, அந்த யானை காட்டுக்குள் சென்றது. வனத்துறையினர் தக்க சமயத்தில் வந்ததால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அந்த நபருக்கு ரூ.4000 அபராதம் விதித்தனர். மீண்டும் இதேபோல் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வனத்துறையினர் அவரை விடுவித்தனர்.