அந்த பகுதியில் மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முர்ஷிதாபாத் டிஐஜி முகேஷை பதவியில் இருந்து நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் பாஜ சார்பில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.