அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 7 காட்டு முயல்களை வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. அதில் 6 முயல்கள் உயிருடனும், ஒரு முயல் இறந்த நிலையிலும் இருந்தன. மேலும் இருசக்கர வாகனம், நெற்றி லைட், வேட்டைக்கு பயன்படுத்தும் பிடிவலைகள் ஆகியவற்றையும் வைத்திருந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினர், விருதுநகர் வனப்பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த நாகப்பன்(40), ஆனைக்குட்டம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(34), பாலமுருகன்(27) என தெரியவந்தது.பின்னர் மூவரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்ட 3 வாலிபர்களுக்கும் அபராதம் விதித்தனர்.