இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்று, விஜிபி.ராஜாதாஸ் எழுதிய ‘என் தந்தையாரின் அறிவு சிந்தனைகள்’ நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் மஸ்தான் பங்கேற்று, ‘சிலம்பு எனும் இசை நாட்டிய களஞ்சியம்’ நூலை வெளியிட்டு பேசுகிறார். தமிழறிஞர் முத்துக்குமாரசாமி எழுதிய ‘வ.உ.சிதம்பரனார்’ நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் நூல்களைப் பெற்று பேசுகிறார். இதில் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், முனைவர் அவ்வை ந.அருள், நாஞ்சில் பிற்றர், மல்லை சி.இ.சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சிகளை முனைவர் உலகநாயகி பழனி தொகுத்து வழங்குகிறார்.