பொங்கல் திருநாளை தொடர்ந்து வந்த 3 சந்தைகளில் வர்த்தகம் என்பது ₹80 முதல் ₹1 கோடி வரை ஆனது. இந்நிலையில் கோடைக்காலம் நெருங்கும் நிலையில் அதிகளவில் கால்நடைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் வரும். அதற்கு கோடையில் வழக்கமாக வரும் தீவனப்பற்றாக்குறை காரணமாக கூறப்படும். அதேபோல் இன்று பொய்கை மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் மாடுகள், கோழிகள், ஆடுகள் என கால்நடைகள் குவிந்தன. ஆனால் வர்த்தகம் என்பது ₹70 லட்சம் அளவிலேயே நடந்திருக்கும் என்றும், இந்த நிலை வருங்காலங்களில் மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.