தொடர்ந்து லளிகம் ஏரி, நார்த்தம்பட்டி ஏரியில் முகாமிட்டது. வனத்துறையால் விரட்டப்படட யானை முத்தம்பட்டி, தொப்பூர் காட்டின் வழியாக, வத்தல்மலை வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடத்தூர், மணியம்பாடி, பொம்மிடி போன்ற பகுதிகளில், வத்தல்மலை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இந்த யானையின் நடமாட்டம் குறித்து, ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினர், மருத்துவர் பிரகாசம் தலைமையில் யானை இருக்கும் பகுதியில் நேற்று முன்தினம் முகாமிட்டனர். இரவு 11 மணியளவில் துப்பாக்கி மூலமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால், யானைக்கு மயக்கம் ஏற்படவில்லை.
தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து, மேலும் ஒரு மயக்க ஊசி, யானை மீது செலுத்தப்பட்டது. இதையடுத்து யானை அங்குமிங்கும் ஓடித்திரிந்தது. பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் யானை மயங்கியது. இதையடுத்து அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, அதிகாலை 2 மணியளவில் யானையை லாரியில் ஏற்றிச்சென்றனர். நேற்று அதிகாலை அஞ்செட்டி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, யானை அங்கு விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த யானையின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.