அதன்படி வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் மரக்கட்டில், பீரோ செய்யும் கம்பெனியில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.