மேலும் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பயனாளிகளுக்கு ஆணைகளையும் வழங்கினார். பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் 4680 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். 72 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.