ஆதிவராகபுரத்தில் தடையின்றி குடிநீர்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ நடவடிக்கை

பள்ளிப்பட்டு: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியில் இருந்து சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க எஸ்.சந்திரன் எம்எல்ஏ நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆதிவராகபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கிராமத்தில் குடிநீரின்றி வறட்சி நிலவுவதாகவும், உப்புநீர் குடித்து வருவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக திருத்தணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஆழ்துளை கிணறு அமைத்தும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்ததால், கிராமமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் பிரதானசாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்த்துவைத்துள்ளார். சேப்பாக்கம் பிரபாகரன், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய கவுன்சிலர் அம்முசேகர் ஒன்றிய நிர்வாகிகள் சங்கரன், நவீன்குமார், திருவேங்கடம், சுகுனாமூர்த்தி, பெருமாள், வெங்கடேசன், பிச்சாண்டி, டில்லிபாபு, அரசு வழக்கறிஞர் ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு