இதில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 16,273 பேர் சிக்கினர். இவர்கள் மீது, ரயில்வே சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1.05 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.