வேளாண், மீன்வள துறை படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என இரு பல்கலை கழகங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் நடத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை பல்கலை.யில் 14 இளமறிவியல் படிப்புகள், 3 டிப்ளமோ படிப்புகள் உள்ளன. மீன்வள பல்கலைகழகத்தில் 6 இளமறிவியல் பாடங்கள், 3 தொழில் முறை பாடபிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலை.யில் உறுப்பு கல்லூரியில் 3,363 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 2,806 இடங்கள் என மொத்தம் 6,169 இடங்கள் உள்ளன. மீன்வள பல்கலைக்கழகத்தில் மொத்தம் 345 இடங்கள் உள்ளன. 57 சிறப்பு இட ஒதுக்கீடு இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் தற்போது வரை 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும், அதனை தொடர்ந்து கவுன்சிலிங் தேதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்