கூலி தொழிலாளியான சைலப்பன், புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததால், போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் சோதனை நடத்தி 285 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரக்கு வருமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்தும் வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கினார். மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவர், நேற்று மாலை உயிரிழந்தார்.