திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 65,570 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,446 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.53 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்

குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்