ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக நேற்று ஆட்டமிழக்காமல் 55 ரன் விளாசிய இந்திய வீரர் திலக் வர்மா, அந்த அரை சதத்தை தனது அம்மாவுக்கும், ‘பெஸ்ட் பிரண்ட்’ சமைராவுக்கும் (ரோகித் ஷர்மாவின் மகள்) அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். வலது விலா பகுதியில் அம்மாவின் படத்தை பச்சை குத்தியிருக்கும் திலக், ஜெர்சியை தூக்கி அதைக் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.