புலிகளின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: உலக புலிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி: உலக புலிகள் நாளில், சிறப்புமிகு உயிரினமான நம் புலிகளின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்போம். அருகிவரும் உயிரினமான புலிகளை காப்பதற்கான தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சிகள் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளது.

2018-ம் ஆண்டில் 264ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 306 ஆக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து கானகத்தில் புலிகளின் இடத்தை பேணிக் காத்து, அவற்றின் அழகை போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!