சமீபத்தில் நடந்து முடிந்த பருவத்தேர்வில் பழைய கேள்வித்தாள் அப்படியே கேட்கப்பட்டது மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த 8ம்தேதி முதுகலை இரண்டாம் ஆண்டு கணித அறிவியல் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில், ‘புரோகிராமிங் சி பிளஸ் பிளஸ்’ என்ற பாடப்பிரிவுக்கான கேள்வித்தாளில் இளங்கலை கணித அறிவியல் படிப்பில் கேட்கப்படும் ‘புரோகிராமிங் சி’ பாடப்பிரிவில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்த விடைத்தாள்களை திருத்த கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி வரும் 27ம் தேதி (நாளை) மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.