இலங்கை – அயர்லாந்து மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

காலே: இலங்கை – அயர்லாந்து அணிகல் மோதும் 2வது டெஸ்ட், காலே சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலே ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் கருணரத்னே 179, குசால் மெண்டிஸ் 140, சண்டிமால் 102*, சமரவிக்ரம 104* ரன் விளாசினர். பிரபாத் ஜெயசூரியா 2 இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் அதே காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இலங்கை அணி வரிந்துகட்டுகிறது. அதே சமயம், இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் அயர்லாந்து களமிறங்குவதால், போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Related posts

நெல்லையில் கிழக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மாயம்..!!

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!

கிருஷ்ணகிரியில் முதற்கட்டமாக 52 தனியார் பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு