மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நாப்லாக் லாஜிஸ்டிக், மருதார் எக்ஸ்பிரஸ் மற்றும் மா பவானி லாஜிஸ்டிக் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் மும்பையிலிருந்து ஐதராபாத் வரை ஜி.எம்.ஆர். உள்நாட்டு விமான முணையத்தில் ஏர் கார்கோ மூலம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதனை யார் அனுப்பியது போன்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.