தமிழ்நாட்டில் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வட்டாரா கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஜூலை 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு செப்டம்பர் 10ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் இளநிலை படிப்பு முடிந்திருக்க வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பிக்கும் போது அத்தகைய ஆவணங்களை பதிவேற்றத் தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழ் வழியில் படித்தவர்கள்’ என்பதற்கு ஆதாரமாக விண்ணப்பம் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான கல்வித் தகுதி சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் பொழுது சமர்ப்பிக்க வேண்டும்

குறிப்பிட்ட வகைகளில் ஏதேனும் ஒரு நேரடி ஆட்சேர்ப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லீம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியலிடப்பட்ட சமூகங்கள் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டவற்றைகளுக்கு வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொழுது தேவையான ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்து வைத்திருக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். மொபைல் எண், ஜிமெயில், ஆதார் எண் ஆகியவை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை