மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, பொங்கல் பரிசாக ரூ.1,000, வெள்ள நிவாரணமாக ரூ.6,000 கிடைத்துள்ளது என சகோதரி கூறுகிறார். தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சயாக இருகும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?. உலகத்தை வளப்படுத்தச் சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது. கடல் கடந்து தமிழர்கள் வெற்றி பெற முயற்சி, உழைப்பே காரணம். 2010-ல் வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கினார் கலைஞர்.
அயலக தமிழர் நலனுக்காக தனி துறை உருவாக்கி, தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேர்களை தேடி என்பது இந்த ஆண்டின் முத்தாய்ப்பான திட்டமாக அமைந்துள்ளது. அயலக தமிழர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அயலக தமிழர்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது தமிழ்நாடு அரசு பத்திரமாக அவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது. எப்போது பிரச்சனை வந்தாலும் தமிழர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு மீட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார். .