155 ரன் பின்தங்கிய நிலையில் நேற்று 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 75.4 ஓவரில் 122 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. செதேஷ்வர் புஜாரா 46 ரன், கெவின் ஜிவ்ரஜனி 27, வாசவதா 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.தமிழ்நாடு பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 4, சந்தீப் வாரியர் 3, அஜித் ராம் 2, முகமது அலி 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 60 ரன் மற்றும் 9 விக்கெட் (5+4) எடுத்த சாய்கிஷோர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.