இன்று தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு நேற்று பூக்கள் அதிக அளவில் வந்து குவிந்தன. அதேசமயம் பூக்கள் தேவை அதிகரித்த நிலையில் விலை கடுமையாக உயர்ந்தது. ஏராளமான சிறு வியாபாரிகள் அதிகாலை முதலே மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். கிலோ அளவில் மல்லி மற்றும் ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, ₹சாமந்தி 300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 என விற்பனை செய்யப்பட்டது.