தொடர்ந்து, 49வது வார்டு, பகவத்சிங் தெருவில் ரூ.9.50 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 52வது வார்டு, கன்னடபாளையம் பகுதியில் ரூ.9.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு டி.ஆர்.பாலு எம்.பி, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் 49வது வார்டு, அண்ணா தெருவில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், ஆணையர் அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.